Home » யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விஹாரை சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விஹாரை சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

Source

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் ஸ்ரீநாக விஹாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

ஸ்ரீநாக விஹாரையின் விஹாராதிபதி மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதிஇ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். புனித தலத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியை பௌத்த – இந்து சமய மன்றத்தின் தலைவர் கலாநிதி எம். மோகன் வரவேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீனத்தின் தலைவர் ஸ்ரீசோமசுந்தரம் சுவாமியையும் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் யாழ் ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, யாழ் ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image