Home » ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரணை

ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரணை

Source

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த விசாரணை பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான சில அம்சங்கள் மற்றும் அவற்றின் செலவினங்கள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என அறியப்படுகிறது. குறிப்பாக, 2022, 2023, மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பணியாற்றிய இரண்டு மூத்த அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற CID திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களை இலங்கைக்கு வரவழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சகத்தின் உதவியை CID நாடியுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சில வெளிநாட்டுப் பயணங்களின் செலவுகள் குறித்தும், குறிப்பாக ஒரு பயணத்திற்காக “ரூ. 100 கோடி செலவு” செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அத்துடன், அவரது பிரித்தானிய பயணத்தின்போது, ஒரு ‘பட்லரை’ நியமித்து, ஒரு நாளைக்கு £1,000 செலவு செய்ததாகவும், இதற்கான செலவுகளை லண்டனில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மூலம் கோரியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்த விசாரணை, பொது நிதியின் பயன்பாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image