Home » லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்.ப்பட்டுள்ளது

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்.ப்பட்டுள்ளது

Source

லெபனானில் வாழும் இலங்கையர்களது பாதுகாப்புப் பற்றி அநாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

லெபனானில் இலங்கையர்கள் ஏழாயிரத்து 600 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் பதற்றநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் 25 பேர் உள்ளனர். சகலரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டார்.

அதேவேளை, இஸ்ரேலில் இருந்து டுபாய் – அபுதாபி – புதுடில்லி ஊடாக கொழும்பு வரும் விமான சேவைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இதன் காரணமாக கொழும்பு – ரெல்-அவிவ் நகரங்களுக்கு இடையலான விமான சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் தத்தமது விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நேர அட்டவணை பற்றி விசாரித்துக் கொள்வது சிறந்தது என தூதுவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image