இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை இலங்கை வரவுள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும். திருகோணமலை அபிவிருத்தித் திட்டம், மின்சார விநியோகம் என்பன பற்றிய இரண்டு ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.