Home » இனவிடுதலையுடன்   போதை விடுதலைக்கும் போராட வேண்டும்.

இனவிடுதலையுடன்   போதை விடுதலைக்கும் போராட வேண்டும்.

Source

இன விடுதலைக்காக உழைக்க முன் வந்த வேட்பாளர்கள் எமது இளம் சந்ததி போதையில் இருந்தும் விடுதலை பெற உழைக்க வேண்டும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளூராட்சி வேட்பாளர்களிடம் அழைப்பு விடுத்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று இளங்கலைஞர் மண்டபத்தில் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி சபைக்காக 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பெற்ற அனுபவத்தின் மூலம் தனித்து போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்திற்கமையவே இம்முறை தமிழ் அரசுக் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. இதேநேரம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருப்போர் வேறாக போட்டியிடும் நிலையில் நிச்சயமாக இந்த புதிய உத்தியில் பெரும்பான்மையை பெற முடியும்.

இந்த முடிவிலும் சிலரிடம் மாறுபட்ட கருத்து இருக்கலாம் ஆனால் இதன் நன்மை, தீமையை வாக்களிப்பின் பின்பே தீர்மானிக்கும் என்றார்.

இக் கலந்துரையாடலில்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிரேஸ்ட தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும்  உள்ளீராட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
TL

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image