Home » இலங்கையில் செம்பனை தடை நீக்கம்

இலங்கையில் செம்பனை தடை நீக்கம்

Source

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலையீட்டைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது அவர் விதித்திருந்த பாம் ஒயில் (செம்பனை) பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் செம்பனை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் பயிரிடுவதற்கும் 2021 ஆம் ஆண்டு தடை விதித்து ராஜபக்சே உத்தரவிட்டார்.

செம்பனை பயிரிட அனுமதி வழங்கப்படும் என ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட தடையினால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய செம்பனை உற்பத்தியாளர் சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேயிலை மற்றும் ரப்பர் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தை விட செம்பனை அதிக அந்நிய செலாவணி வருவாயை ஈட்ட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு ஏக்கர் செம்பனை செய்கையில் மாதம் ரூ.75,000 வருமானம் கிடைக்கும். அரசாங்கம் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மீண்டும் நாட்டில் செம்பனை பயிரிடுவதற்கு அனுமதியளிக்கும் என கருணாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி ஜனவரி மாதம் தடையை நீக்குவதை உறுதி செய்வதாக அவர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image