Home » ஈழத்தமிழர்களது நியாயங்களை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்

ஈழத்தமிழர்களது நியாயங்களை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்

Source
எமக்கும் இந்தியாவுக்குமான உறவுநிலை எங்கு கைவிட்டுப்போனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது, நியாயங்களையும் அறைகூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது. ஈழத்தமிழர்களதும் இந்தியாவினதும் சமூக அரசியல் பொருளாதார பாதுகாப்பு உறவுநிலைகள் பன்னெடுங்கால வரலாற்றுக்கு உரியவை. அந்த உரித்தின் அடிப்படையில்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானது. இந்தியா தனது பிராந்தியத்தின் நலன் மற்றும் ஈழத்தமிழினத்தின் பாதுகாப்பு அரசியல் உரிமை என்பவற்றை கருத்தில் கொண்டே தனது முழுமையான பலத்தின் திரட்சியின் அடிப்படையில்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் இலங்கையில் தனது படைத்தரையிறக்கத்தையும் நிகழ்தியிருந்தது. அதற்கு பின்னரான சில கசப்பான அசாதாரணமான நிகழ்வுகள் இந்திய – ஈழத்தமிழர்களது உறவு நிலைகளில் இடைவெளியை ஏற்படுத்தி இறுதியில் சிறிபெரும்புத்தூரில் ஏற்படுத்தப்பட்ட துன்பியல் நிகழ்வினை அடுத்து ஈழத்தமிழர்களை இந்தியா முற்றுமுழுதாக கைவிட்டுவிட்டது. எமக்கும் இந்தியாவுக்குமான உறவுநிலை எங்கு கைவிட்டுப்போனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம். சிறிபெரும்புத்தூரில் வழக்குகளில் தண்டனைபெற்று இந்திய நீதிமன்றங்ளால் விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களான முருகன், றொபேட், டயஸ் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டும் என இந்திய மத்திய மாநில அரசுகளை எமது மக்களின் சார்பில் கேட்டுகொள்கிறோம் – என்றுள்ளது
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image