Home » கனடாவில் பயங்கரம், 6 இலங்கையர்கள் சுட்டுக் கொலை

கனடாவில் பயங்கரம், 6 இலங்கையர்கள் சுட்டுக் கொலை

Source
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 06 பேரும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பொலிஸாரின் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கனடாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்த அக்குடும்பத்தினரின் பெயர் விபரம் வருமாறு, ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பண்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகனாயக (35) – தாய், இனுக விக்ரமசிங்க (7) – மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) -மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image