சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. நிதியத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிஸ்ரலினா ஜோர்ஜியாவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
