Home » தமிழ் அரசியல் கைதி மீது சிறைச்சாலையில் தாக்குதல்

தமிழ் அரசியல் கைதி மீது சிறைச்சாலையில் தாக்குதல்

Source

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன்

சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு உள்ளானவரை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசியல் கைதிகளாக அரசாங்கம் உள்வாங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என கூறியுள்ள சாணக்கியன், இதில் சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image