தலைமுறைத் தவறுகளும், தடுமாறும் லங்காபுரியும்!
---------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி
கடந்த வாரம் சிறீலங்கா வங்குரோத்து நிலையை அறிவித்துள்ளது. சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி மற்றும் தொடர்ந்து வந்த மத்திய வங்கி ஆளுநர்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலையானது மற்றும் "உள்நாட்டு" நடவடிக்கைகளை நம்பியதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தாது என்று இரண்டு வருடங்கள் மறுத்ததன் பின்னர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
சிறீலங்காவின்; இறையாண்மைக் கடன் மதிப்பீட்டைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச மூலதனச் சந்தைகளில் இருந்து நாடு ஒதுக்கப்பட்ட பின்னர் இது நிகழ்ந்தது. இந்த அறிவிப்பின் பிரகாரம்,
• ஏப்ரல் 12 முதல் அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
• முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இயல்புநிலை அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• ஆர்வமுள்ள கடனளிப்பவர்கள் ரூபாயில் நிலுவைத் தொகையை கோரலாம்.
• ஏப்ரல் 12க்குப் பிறகு புதிய கடன் வசதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடன் வசதிகளின் கீழ் வழங்கப்படும் எந்தத் தொகையும் விலக்கப்பட்டு, சாதாரணமாகச் சேவை செய்யப்படும்.
• இலங்கையின் நிதி நிலை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்கான கடைசி முயற்சியாக மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.
• அத்தியாவசிய இறக்குமதிக்கு உதவும் கருவூல செயலாளரும் CBSL தலைவருமான ஊடகவியலாளர்களின் நடவடிக்கையானது வெளிநாட்டுக் கடன் சேவையின் சாத்தியமற்ற தன்மை மற்றும் கூ 51 பில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுக் கடன் நிலையானதாக இல்லை என்பதைத் தொடர்ந்து கூறுகிறது.
• சிறீலங்கா இந்த ஆண்டு கிட்டத்தட்ட $ 6 பில்லியன் கடன் சேவையையும் 2026 வரை $ 25 பில்லியன் ஐயும் கொண்டுள்ளது.
• சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் வரவிருக்கும் பொருளாதார உதவித் திட்டத்துடன் ஒத்துப்போகும் வெளிப்புறக் கடன் பொறுப்புகளை 'ஒழுங்கு மற்றும் ஒருமித்த' மறுகட்டமைப்பைக் கூறவும்; பிற பலதரப்பு மற்றும் இருதரப்பு பங்காளிகளிடமிருந்து உதவி கோரப்பட்டது.
• தரமதிப்பீடு செய்யும் முகவர் நிலையங்கள் இலங்கையை கட்டுப்படுத்தும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இயல்புநிலை நிலைக்கு தரமிறக்கும்.
சிறீலங்கா அரசாங்கம் கடந்த செவ்வாய் 12.04.2022 அன்று சிறீலங்கா திவாலாகிவிட்டதாக சமிக்கை செய்து, அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தது, வெளி மற்றும் உள் அதிர்வுகளால்; ஏற்பட்ட மோசமான நிதி நிலை காரணமாக நாடு அதன் உறுதிப்பாட்டை இனி மதிக்க முடியாது என்றும் இந்த நடவடிக்கையானது, சுதந்திரத்திற்குப் பின்னர், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கடமைகளுக்குச் சேவையாற்றுவதற்கான சிறந்த சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது, ஆனால் பேரழிவுகரமான “கடினமான இயல்புநிலைக்கு" மாறாக “பேச்சு வார்த்தை அல்லது மென்மையான இயல்புநிலை” மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது எனவும் கூறியது.
சிறீலங்காவின் திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன ஊடகவியலாளர்களிடம், “ சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) ஆதரிக்கப்படும் பொருளாதார உதவித் திட்டத்தால் வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளை “ஒழுங்கு மற்றும் ஒருமித்த" மறுசீரமைப்பு உறுதிப்படுத்தும். 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை வெளிநாட்டுக் கடன் சேவையில் கறைபடாத சாதனையைப் பெற்றுள்ளதாகவும், இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ஏற்பட்ட பகைமையின் வீழ்ச்சி உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வுகள், இலங்கையின் நிதி நிலையை சிதைத்துவிட்டது," என்று கூறினார்.
ஆனால் உண்மையில் இலங்கை வரலாற்றில் 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபின் வந்த ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதன் தமிழ் இனவழிப்பு நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றின் தாக்கமே இன்றைய நிலைக்கு காரணமாகும்.
2019 இல் ஆட்சிக்கு வந்து தமிழினத்தை மேலும் அழிப்பதற்கு தங்கள் சிந்தனையைச் செலவிட்ட இந்த ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதார நிலை அதன் எதிர்காலம் பற்றி எதையும் சிந்திக்காமல் நாட்டின் வரிகளில் ஏற்படுத்திய தளர்ச்சியும் தற்போதைய பேரழிவுச் சூழலை நிர்மாணித்தன என்பதே பேருண்மை.
“கடந்த மாத இறுதியில் IMF சிறீலங்காவின் கடன் கையிருப்பு நிலையற்றது என்று மதிப்பிட்டது. இது, அரசாங்கம் அதன் அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான முயற்சியில் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இது இனி உறுதியான கொள்கை அல்ல என்பதும், இந்தக் கடப்பாடுகளின் விரிவான மறுசீரமைப்பு தேவைப்படும் என்பதும் இப்போது தெளிவாகிறது,” என்று நிதி அமைச்சகச் செயலாளர் ஒப்புக்கொண்டதன் மூலம் இந்த கடினமான யதார்த்தத்தை எதிர்கொண்ட சிறிவர்தன, பொருளாதார மீட்சித் திட்டத்தை வடிவமைப்பதில் உதவி மற்றும் அவசர நிதி உதவிக்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளது என்றார்.
அசாதாரண சூழ்நிலை மக்கள் மீது ஏற்படுத்திய துன்பங்களைப் போக்க அரசாங்கம் அதன் பிற பலதரப்பு மற்றும் இருதரப்பு பங்காளிகளிடமிருந்தும் நிதி உதவியை நாடுகிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் ஏனைய உத்தியோகபூர்வ துறை பங்காளிகளின் உதவியுடன், முழுமையான பொருளாதார மீட்சி வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் வரை, நிதி நிலைமையை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளாக அரசாங்கம் இந்த அவசர நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தனது அண்டைநாடான இலங்கை மக்கள் துயரத்தைப் போக்குவதற்கு எனப் தொடர்ந்து உதவிகளை வழங்கிவரும் இந்தியா சாதுர்யமாக இந்த நிலையைக் கையாள்கிறது. ஆயினும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து முற்றும்முழுதாக இலங்கை மீள அது உதவிபுரியுமா என்றால், இல்லை, மாறாக தனது அரசியல் ஆளுமையை செலுத்தும் வகையிலேயே இந்தியாவின் நகர்வுகள் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். யுக்ரைன் பிரச்சனைக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மேற்குலகிற்கும், இந்தியாவிற்குமிடையிலான உரசல் நிலையினிலே இந்தியா தன் அயல்நாட்டின் களச்சூழ்நிலையை செவ்வனவே கையாள்கிறது.
சிறீலங்காவின் தற்போதைய நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. தமிழ் சிங்கள் முஸ்லீம் இணைவுப் போராட்டமாக அங்கு நடக்கின்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களை மறைமுகமாக சர்வதேச அரசியல் ஊக்குவிக்கிறது. பாகிஸ்தானில் எவ்வாறு ஒரு ஆட்சிமாற்றத்தை மேற்குலகம் ஏற்படுத்தியது போல இலங்கையிலும் நடக்கின்றது. சர்வதேச வல்லாதிக்க மேற்குலகுக்கும், பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியாவிற்குமிடையில் நடக்கும் உரசலின் பின்ணனியே இந்தப் போராட்டங்களின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலாகும். இச்சூழ்நிலையில் தற்பொழுது ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்களை தக்கவைக்கும் அவசியம் இந்தியாவிற்கு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆட்சிக்கு கொண்டுவருதல் என்பது சாத்தியமல்ல. மேற்குக்கு சாதகமாக செயற்படும் வல்லமை ரணில் விக்கிரம சிங்கவுக்கே உண்டு. அதேவேளை ஏதோ விதத்தில் ரணில் இலங்கை அரசியிலில் தன்னை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. நடப்பு அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்பும், அதேவேளை எதிர்த்தரப்புக்களும் மீண்டும் ரணிலை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனும் களச் சூழ்நிலையும் காணப்படுகிறது. இத்தருணத்தில் மேற்குலகம் சார்பான ஆட்சிமாற்றம் ஒன்று வருவதை பிராந்திய சக்தியான இந்தியா தடுத்திடவே முயற்சிக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் நாங்கள் தெளிவற்றவர்களாக சிங்களவர்களுடன் இணைந்து போராடவேண்டும் என்று சிந்திப்பது மடமையாகும். காட்டுத்தீயாய் பற்றி எரியும் இந்தப் பெருநெருப்பு ஒரு மாற்றம் வரும்வரை எரிய ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்தருணத்தில் தமிழர்களாகிய நாங்கள் சரியான சிந்தனை செயல்வழியில் செயற்படவேண்டும். ஒரே கட்சியில் இருந்து கொண்டே சுமந்திரன் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுவதும், சிறீதரன் எதிர்ப்புத் தெரிவிப்பதும் கேலிக்குரிய ஒருவிடயமாகும். இந்நிலை மாறவேண்டும் என சாதரணரும் கவலைகொள்ளும் நிலையினிலேயே தமிழினம் தலைநிமிர வழிதேடுகிறது.
இன்று எழுந்துள்ள உரசல் நிலையினில் சர்வதேசப் பரிமாணத்தையும், உள்நாட்டுப் பரிமாணத்தையும் சிந்தித்து தமிழ் தலைவர்கள் தீர்மானம் எடுக்கவேண்டும். இந்நிலையில் தமிழக்கட்சிகள் ஒன்றிணைந்து இந்நிலைமையைக் கையாளுவதற்கான ஒரு பொதுத் தீர்மானம் எடுக்கவேண்டும் என்கிற முடிவுக்கு கடந்த வியாழக்கிழமை வந்துள்ளமை சற்று நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. எமக்கு சாதகமாக இருக்கின்ற இந்தப் பரிமாணத்தை, எமக்குக் கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பை முறையாக, ராசதந்திர ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் தமிழர்கள் மட்டுமல்ல முழு இலங்கையர்களும் நன்மைபெறும் வாய்ப்பும் இதில்தான் அடங்கியுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.