நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இயந்திர கோளாறு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக நேற்று (17) இரவு முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை விசேட அறிக்கை ஒன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார விநியோகம் தடைபடாது, இந்த பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.