Home » நுவரெலியாவிலுள்ள இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை குத்தகைக்கு வழங்க அனுமதி

நுவரெலியாவிலுள்ள இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை குத்தகைக்கு வழங்க அனுமதி

Source

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) சொந்தமான சொத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து போட்டி முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பேச்சுவார்த்தைக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.

அதன்படி, மேற்படி குழுவின் சிபாரிசுக்கு அமைவாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் மேற்படி சொத்தை Colonial Properties Private Limited நிறுவனத்திற்கு 50 வருட குத்தகை காலத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image