பணவீக்கம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை
.
நாட்டின் பணவீக்கம் வீழ்;ச்சிகாணும் போக்கு தொடர்ந்தும் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் பகுதியில் நாட்டின் பணவீக்கம் குறைவடைந்து 2023ம் ஆண்டின் இறுதியில் பணவீக்கம் சாதமான மட்டத்தை எட்டும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் ஏற்படுமாயின் முறையான கொள்கையின் மூலம் அது கட்டுப்படுத்தப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கிசுட்டிக்காட்டியுள்ளது.