Home » பாரிஸ் கிளப் இலங்கைக்கான கடன் உத்தரவாதங்களை வழங்கியது!

பாரிஸ் கிளப் இலங்கைக்கான கடன் உத்தரவாதங்களை வழங்கியது!

Source

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை கடன் வழங்கும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இதனைத் தெரிவித்துள்ளது.

பரிஸ் கிளப் உறுப்பினர்கள், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவும் இந்தியாவும் நிதியுதவி உத்தரவாதங்களை வழங்குவதற்கு தங்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் தெரிவித்துள்ளன.

IMF இலிருந்து $2.9 பில்லியன் கடனை இலங்கை பெற இந்த உத்தரவாதங்கள் முக்கியமானவை.

N.S

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image