Home » மனித கடத்தல்காரர்களை தடுக்க புதிய தொழிநுட்ப முறை அறிமுகம்!

மனித கடத்தல்காரர்களை தடுக்க புதிய தொழிநுட்ப முறை அறிமுகம்!

Source
மனித கடத்தல்காரர்களிடம் இருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும், ஆள் கடத்தலை தடுக்கும் வகையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி தரவுத்தளத்தில் சேமித்து வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனிநபர்களின் உடல் அம்சங்கள் மற்றும் குணாதிசயங்கள் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு கண்கள், கைரேகைகள் மற்றும் பிற உடல் பண்புகள் பெறப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆள் கடத்தலைத் தடுக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டுச் சேவைப் பணியகம், பணியகச் சட்டத்தில் புதிய திருத்தங்களை முன்வைத்து விதிகளை கடுமையாக்குவதுடன், ஆட்கடத்தலுக்கு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. N.S
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image