கதிர்காமம் மற்றும் லுனுகம்வெஹர பிரதேசங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.