Home » முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.11.2023

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.11.2023

Source

1. 2024 வரவுசெலவுத் திட்டத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தை அதன் தொடர்ச்சியாக 2வது வார நட்டத்தை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்க எம்.பி.க்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட சாதகமான அம்சங்கள் பங்கு முதலீட்டாளர்களை நம்ப வைக்கத் தவறிவிட்டன. ASPI வாரத்தில் 86 புள்ளிகளை (0.81%) இழக்கிறது. அதே நேரத்தில் சராசரி தினசரி வருவாய் ரூ. 1 பில்லியன் வரை மேம்படுகிறது.  இது முந்தைய வாரத்தில் ரூ.834 மில்லியனாக இருந்தது.

2. தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்களை நினைவு கூர்ந்து மாவீரர் தினத்தை கொண்டாட முயற்சிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்தனர்.

3. ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் அந்தப் பதவிகளை வகிக்கத் தகுதியற்றவர்கள் என இடைக்கால உத்தரவை பிறப்பிக்க கோரி ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

4. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிராமங்களைப் பாதுகாத்த 34,000 பலமான சிவில் பாதுகாப்புப் படைக்கு இலங்கை முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறுகிறார். ஒவ்வொரு சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினருக்கும் இவ்வாறு முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு 3 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கும் திட்டம் உள்ளதாகவும், ஆனால் அந்தத் தொகை போதாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

5. நீதித்துறையில் வெளிவரும் தலையீடுகள் குறித்து இலங்கை அக்கறை கொள்ள வேண்டும் என மொட்டுக் கட்சி கிளர்ச்சியாளர் குழு பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் சபையின் சார்பாக எந்தவொரு தீங்கான நோக்கமும் இல்லாமல் இந்தப் பிரச்சினையை அவர் எழுப்பியதாகவும் கூறுகிறார். நீதிபதிகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு பாராளுமன்றத்தை வலியுறுத்துகிறார்.

6. குழந்தைகள் கடத்தல் மோசடி குறித்து பொலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். குழந்தைகள் மலேசியா வழியாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு கடத்தப்படுகிறார்கள். இதுபோன்ற 13 குழந்தைகள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலீசார் கூறுகின்றனர்.

7. முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு. இந்த வழக்கை சவாலுக்கு உட்படுத்தி ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடியும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும்.

8. மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க, IMF திட்டத்தின் இரண்டாம் கட்ட கடன் டிசம்பர் 23 மாதத்திற்குள் அங்கீகரிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறார். மேலும் இலங்கை  “நல்ல முன்னேற்றம்” அடைந்து வருகிறது என்கிறார். பணவியல் கொள்கை தளர்த்தலின் பலன்கள் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து வங்கிகளும் சந்தைக் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நாணய வாரியம் வலியுறுத்துகிறது.

9. இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடுத்த பொலிஸார், “நியாயமற்ற முறையில்” செயற்பட்டதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10. வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணி தேர்வு. சினெத் ஜெயவர்த்தன – தலைவர். மல்ஷா தருபதி – துணை தலைவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டியும், தென் ஆப்பிரிக்காவில் 16 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை போட்டியும் நடைபெற உள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image