Home » முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.02.2023

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.02.2023

Source
1. தேர்தல் நடைமுறையில் இடையூறு செய்வதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது. அனைத்து தேர்தல்களும் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அதனால் அவை தடுக்கப்படக்கூடாது என்று சங்கம் வலியுறுத்துகிறது. 2. 25 டிசம்பர் 22 அன்று 175 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பத்திரத்தில் செலுத்தத் தவறிய போதிலும், அனைத்து பத்திரதாரர்களுடனும் இணக்கமான தீர்வை எட்டுவதற்கு ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் உறுதிபூண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக பத்திரகே உறுதியளிக்கிறார். பத்திரம் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால் கடனாளிகள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் வலியுறுத்துகிறார். 3. தற்போது இலங்கையில் இருக்கும் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பீட்டர் ராம்சௌர், ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. தீர்மானம் ஒன்றுக்கு இலங்கையின் ஆதரவை கோருகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த விடயத்தை அவர் முன்வைத்துள்ளார். 4. எதிர்காலத்தில் ஜே.வி.பி ஆட்சியின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அதற்கான திட்டத்தை ஜே.வி.பி.யின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தயாரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 5. இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் புகையிலை, மது, சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாங்கம் “பொருளாதார நன்மைக்காக’ கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் எந்தவொரு வடிவமான நடவடிக்கையும் நன்மை தராது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 6. நாட்டிலுள்ள அனைத்து துறைமுகங்களிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கவுள்ளதாக துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் முதலீடுகள் செய்யப்படும் என்றும் கூறுகிறார். 7. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 13 நிலக்கரி கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 36 நிலக்கரி கப்பல்கள் என்ற இறக்குமதியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய போதுமான அளவு கையிருப்புகளை பேணுவதற்கு எல்.சி.சி உறுதி அளிக்கிறது. 8. மற்றொரு ஜப்பானிய நிறுவனமான Taisei இலங்கையில் தமது சேவைகளை முடிவுறுத்த திட்டமிட்டுள்ளது. “இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் வணிகம் செய்வது கடினம்” என்று நிறுவனம் தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் 2020 இல், Taisei கட்டுமானத்திற்காக JY 62bn (USD 462mn) மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது. BIA விரிவாக்கத்தின் 2வது கட்டம் இதுவாகும். முன்னதாக, மிட்சுபிஷி கார்ப்பரேஷன் மார்ச் 2023 க்குள் இலங்கையிலிருந்து வெளியேறுவதாக கூறியிருந்தது. 9. நாட்டில் இறக்குமதி தடைகள் தொடர்ந்தால் மீள் அழைக்க நிர்பந்திக்கப்படும் என இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்களுக்கு ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 10. கண்டி SC அணி CR & FC அணியை 29-10 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கையின் ரக்பி லீக் சாம்பியன் ஆனது.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image