Home » முக்கிய திட்டத்துடன் யாழ். செல்லும் தம்மிக்க பெரேரா

முக்கிய திட்டத்துடன் யாழ். செல்லும் தம்மிக்க பெரேரா

Source

இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (30) நடைபெறவுள்ளது.

DP கல்வியின் ஸ்தாபகர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தம்மிக்க பெரேரா தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

டிபி கல்வி ஐடி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழி பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய். யாழ்.மாவட்டத்திலுள்ள தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளைகளின் மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கட்டங்களின்படி நாளை வழங்கப்படவுள்ள சான்றிதழ்களின் பெறுமதி 4,000 மில்லியன் ரூபாவாகும்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், உள்ளூர்வாசிகள் என சுமார் 10,000 பேர் பங்கேற்க உள்ளனர். உங்கள் பிள்ளையை முற்றிலும் இலவசமான, வேலை சார்ந்த கணினி மொழிப் படிப்பிற்கு பரிந்துரைக்க, உங்கள் அருகிலுள்ள DP கல்வி IT வளாகக் கிளையைத் தொடர்புகொள்ளவும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment