Home » மேலும் 21 இந்திய மீனவர்கள் கைது

மேலும் 21 இந்திய மீனவர்கள் கைது

Source

எல்லை தாண்டி மீன்பிடித்த 21 இந்திய மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள்இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மீனவர்களின் கைது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image