Home » வங்கிகளை மூடிவிட்டு நாடாளுமன்றத்தை கூட்டி என்ன செய்யப்போகிறார்கள்?

வங்கிகளை மூடிவிட்டு நாடாளுமன்றத்தை கூட்டி என்ன செய்யப்போகிறார்கள்?

Source
முன்னெப்போதும் இல்லாத வகையில் நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் செயற்பட வேண்டுமென நாட்டின் வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது. ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக பிரதமரும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற வேலைத்திட்டத்திற்கு கால அவகாசம் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்த விடுமுறை அமுல்படுத்தப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். அதேநேரம், வார இறுதியில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். ஐந்து நாள் வங்கி விடுமுறையின் இரண்டு நாட்களில், 140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஐந்து நாள் விடுமுறையில் நாடாளுமன்றம் என்ன செய்யப்போகிறது என? இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. “இதன் ஊடாக வங்கிகள் மற்றும் வங்கி வைப்பாளர்கள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதன் மூலம் நாட்டின் உள்நாட்டுக் கடனை  மறுசீரமைக்கும் நடவடிக்கை இவ்வாறுதான் மேற்கொள்ளப்படுகிறது என்ற உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.” என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். உள்ளூர் கடன் மேம்படுத்தல்களை மேற்கொள்ள பல வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய சங்கத் தலைவர், கடன் வைத்திருப்பவர்களுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஜூன் 30 ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக பிரதமரால் மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பில் ஏதேனும் நியாயம் இருக்குமானால், தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்து நாட்டில் சில குழப்பங்களை ஏற்படுத்தி அந்த நியாயத்தை அரசாங்கமே சந்தேகமாக மாற்றியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், அபிவிருத்தி முறிகள் மற்றும் அரசாங்க உத்தரவாதங்களின் அடிப்படையில் அரசாங்கம் கடன்களை வழங்குகிறது. உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் அரசாங்கம் திறைசேரி உண்டியல்களின் கீழ் பெறப்பட்ட கடனைக் கருத்தில் கொள்ளவுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். IMF நிபந்தனையல்ல உள்நாட்டில் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகை 42 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற பாரிய தொகையாகும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார். உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை அல்லவெனக்  கூறும் சன்ன திஸாநாயக்க, அரசாங்கம் மறுசீரமைப்பு என்ற வார்த்தையை ஒதுக்கிவிட்டு தற்போது மேம்படுத்தல் என்ற புதிய வார்த்தையைப் பயன்படுத்துவதாக வலியுறுத்துகிறார். இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்கவின் கருத்திற்கு அமைய திறைசேரி உண்டியல்களை மூன்று வழிகளில் விளம்பரப்படுத்த முடியும். “ஒன்று, அந்தப் பத்திரங்களின் முகமதிப்பு ஓரளவிற்கு குறைக்கும் சாத்தியம் உள்ளது. மேலும், அரச பத்திரங்கள் முதிர்வு திகதியை கொண்டுள்ளன. இந்த காலக்கெடு குறித்த அரசாங்கம் இதோ, மேலும், மத்திய வங்கி முதிர்வு திகதியை மேலும் ஒத்திவைக்கலாம் மூன்றாவது வழி இந்த திறைசேரி உண்டியல் வாடிக்கையாளர்கள், நிறுவனங்களை வாங்கிய பின்னர் மத்திய வங்கி அவற்றிற்கு குறிப்பிட்ட வட்டியை செலுத்தும். இதோ இந்த வட்டியில் குறிப்பிட்ட அளவை குறைக்க வாய்ப்பு உள்ளது.” கடன் மறுசீரமைப்பில் இந்த மூன்று முறைகளை மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க, கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தொடர்ந்தும் கூறுகின்ற போதிலும் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என வலியுறுத்தினார். இவ்வாறான நிலையில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பது வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியாது எனவும் சன்ன திஸாநாயக்க மேலும் தெரிவித்தார். உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திற்கு உடன்பாடு இல்லை எனவும், எவ்வித அடிப்படையும் இன்றி நீண்ட வங்கி விடுமுறைகளை வழங்குவது சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் பாரிய பிரச்சினை எனவும் தலைவர் கூறுகிறார். பங்குச் சந்தையை மூடுவதன் மூலம் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என அனைத்துத் தரப்பினரும் கேள்வி எழுப்பியதாகக் கூறும் சன்ன திஸாநாயக்க, நாட்டின் அரச மற்றும் தனியார் வங்கிகள் எவ்வித பிரச்சினையுமின்றி இயங்கும் என வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்தார். “இந்த நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் கூற விரும்புகிறோம், இந்த நாட்டில் உள்ள அனைத்து மற்றும் தனியார் வங்கிகளும் எந்த நெருக்கடியும் இல்லை மற்றும் வலுவாக இயங்குகின்றன, எனவே, இந்த நாட்டின் வாடிக்கையாளர் சமூகம் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம். ஆனால், அந்த வாடிக்கையாளர்கள், அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து,  தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பதை, நாங்கள் அரசுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். அந்த வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், இந்த கடன் மேமபடுத்தலுக்கு முன் அந்த இழப்பை அரசாங்கம் எவ்வாறு ஈடு செய்யும் என்பது குறித்த உத்தரவாதத்தை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.” உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ இருப்புநிலையும் பாதிக்கப்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட ஓய்வுக்கால நிதிப் பலன்களின் விகிதத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மேலும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த நாட்டில் உள்ள வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மையையோ அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையோ பாதிக்காது என, ஜூன் 27 ஆம் திகதி கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக வளாகமான ‘லக்சியன மந்திரய’வை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அவர் தெரிவித்திருந்தார். நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைகள் எதுவும் பாதிக்கப்படாது எனவும் வங்கி வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் எந்தவொரு வட்டியும் பாதிக்கப்படாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. AR
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image