இலங்கை ஆட்பதிவு திணைக்களம் வழங்கும் அனைத்து பொது சேவைகளும் இன்று (17) நடைபெறாது என்று டிஜிட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தத் துறையின் தலைமையகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் வழங்கப்படும் ஒருநாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இன்று முழுவதும் செயல்படுத்தப்படமாட்டாது.
மேலும், கடந்த சில மாதங்களாக இதே போன்ற கணினி கோளாறுகள் பலமுறை ஏற்பட்டதால், சேவைகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
The post ஆட்பதிவு திணைக்கள சேவைகள் பாதிப்பு appeared first on LNW Tamil.