Home » இந்திய அரச குழு இன்று யாழ் வருகை.

இந்திய அரச குழு இன்று யாழ் வருகை.

Source
இந்தியாவின் மத்திய மீன்பிடி அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் தனி விமானம் மூலம் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக  வருகை தரவுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தினை நாளை மறுதினம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில்  பங்குகொள்வதற்காகவே இந்தியாவின் மத்திய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தரவுள்ளார். இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மற்றும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளும் நிகழ்வில் பங்குகொள்வதற்காகவே இந்தியாவின் மீன்பிடி அமைச்சர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். இவ்வாறு வருகை தரும் இந்திய மீன்பிடி அமைச்சர் எல.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் 12ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி நிற்கவுள்ளார். இதேநேரம் இன்று நண்பகல் 12.30ற்கு விசேட விமானத்தில் வரும் இக் குழுவினரை வரவேற்க செந்தில் தொண்டமான் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image