அறுபதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று இலங்கை வந்தடைந்தது. நிலக்கரியை தரையிறங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். இந்த மாதம் மேலும் ஐந்து நிலக்கரி கப்பல்களும், அடுத்த மாதம் ஏழு நிலக்கரி கப்பல்களும் இலங்கைக்கு வரவுள்ளன. ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.