கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நாட்டின் பணவீக்கம் குறைவடையும் சாத்தியம்
நாட்டின் பணவீக்கம் ஒப்பீட்டளவில் இந்த ஆண்டு குறைவடையும் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாடொன்றில் பணவீக்கத்தை ஐந்து சதவீதமாக பேணுவது அவசியமாகும். ஆனால், இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆண்டில் 60 சதவீதத்தைத் தாண்டியிருந்தது. கொரோனா வைரஸ் பரவல், முறையற்ற பொருளாதார முகாமைத்துவம், அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட தட்டுப்பாடு என்பன இதற்கான பிரதான காரணங்களாகும். புதிய விலைச்சுட்டெண் இந்த மாதத்தில் தயாரிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நிரோஷா திசாநாயக்க எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.