கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் பற்றி சீனாஇ இந்தியா ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்;கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி மக்களை அழுத்தங்களில் இருந்து மீட்பதற்காக புதிய அரசியல் முறையின் ஊடாக கூட்டாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். சிரமமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முறையான விவசாய கொள்கையினால் நெல் உற்பத்தியில் மேலதிக தொகையை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக அரசாங்கம் பாரியளவிலான நிதியை செலவிடுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இது எதிர்காலத்திற்கான முதலீடாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் மருந்து தேவைக்காக இந்த வருடத்தில் 30 தொடக்கம் 40 பில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்படவிருக்கிறது. பெரும்போக நெற்செய்கை வெற்றியளித்துள்ளதோடு, எதிர்வரும் மார்ச், ஏப்பிரல் மாதங்களில் நாட்டிலுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோகிராம் அரிசியும் வழங்கப்படவிருப்பதாக ஜனாதிபதி கூறினார்.
நாடு 75ஆவது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடும் இந்த வேளையில் மக்களை பட்டிணியில் வாட இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். பொருளாதார விங்ஞான வர்த்தக நிறுவகம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவிருக்கிறது. ஆண்-பெண் பால்நிலை கற்கை நிறுவகம் ஒன்றும் அமைக்கப்டவிருக்கிறது.
நாட்டின் விவசாய துறையை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.