கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவியும் வகித்து வரும் இலங்கை நிருவாக சேவை முதல்தர அதிகாரியான எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண சபை செயலக செயலாளராக கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (02) கிழக்கு மாகாண அனுராதா யஹம்பத் தலைமையில் 2023 ஆம் ஆண்டின் புதுவருட சந்திப்பும், இவ்வாண்டின் வேலைத்திட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலும் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இக்கலந்துரையாடலில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக கடமையாற்றிய வந்த எம்.வை.சலீம் கடந்த 31.12.2022 ஆம் திகதி ஓய்வுநிலைக்குச் சென்றதையடுத்து ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
AR