Home » மக்களை மையமாகக் கொண்ட பொது சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.

மக்களை மையமாகக் கொண்ட பொது சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.

Source

அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒருபோதும் அரச சேவைகளை குறைத்து மதிப்பிடுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் அலுவலக ஊழியர்களுடன் கலந்துரையாடியபோது இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு செயலும் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமைய வேண்டும். தற்போது அரசியல்வாதிகள் மீதும், அரச சேவையாளர் மீதும் மக்கள் பிழையான அணுகுமுறையை கொண்டுள்ளனர்.

எனவே, அரசியல் அதிகாரமும், அரச சேவையும் பயனற்றது என்ற பொதுக் கருத்தும் உருவாக்கியுள்ளது. இதனால், பலமானதும், வினைத்திறனானதுமான அரச சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image