Home » ISIS சந்தேகநபர் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

ISIS சந்தேகநபர் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

Source

ISIS சந்தேகநபர் என கருதப்படும் உஸ்மான் புஷ்பராஜை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது அவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் உஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான அவர் தெமட்டகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக் கூறி நான்கு இலங்கையர்கள் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

உஸ்மான் புஷ்பராஜை கைது செய்ய, காவல்துறை சமீபத்தில் பொதுமக்களின் உதவியை நாடியதுடன், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image