Home » செந்தில் தொண்டமான் பதுளை வைத்தியசாலைக்கு வழங்கிய பெறுமதியான பொருள்

செந்தில் தொண்டமான் பதுளை வைத்தியசாலைக்கு வழங்கிய பெறுமதியான பொருள்

Source

லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் Dialysis இயந்திரமொன்று இன்று கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானால் கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,

“ ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் இந்த இயந்திரத்தை நன்கொடையாக வழங்கி வைத்தோம். இவ்வியந்திரம் சிறுநீரக நோயாளிகளை குணப்படுத்துவதற்கு அவசர தேவையாக இருந்தது“ என்றும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

இந்நிகழ்வில், இ.தொ.கா.வின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி.சென்னன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image