Home » போர்க்குற்றங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

போர்க்குற்றங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

Source
இலங்கையிடம் கேள்வி எழுப்புகிறது ஐ.நா. போர்க்குற்றங்களும், மனிதகுலத்துக்கும் எதிரான மீறல்களும் உள்நாட்டு சட்டத்தில் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா? இந்த மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? என்று கேள்விகளைத் தொடுத்துள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகள் குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக் கூட்டத்தொடர் கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் நிறைவேற்றதிகாரத்தின் பங்கு என்பன தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு தமது திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்நாட்டுப் போரின் போது இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துவதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய மீளாய்வுக்குழு உறுப்பினர்கள், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 92 சதவீதமான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் வரவேற்றனர். இருப்பினும் அரசமைப்பு சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image