முஸ்லிம்களுக்கு ரமழான் நோன்பு காலத்தில் விசேட விடுமுறை வழங்குவது குறித்த பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பமிளிக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய சுற்றுநிருபம் சகல அரச நிறுவனங்கள், நியதிச் சபைகள், அரச கூட்டுத்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் ஊழியர்கள் சம்பளத்தின் முற்பணத்தை நோன்புப் பெருநாள் கொண்டாடுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார்.