Home » வேட்புமனுக்கள் பெறப்பட்டதன் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்

வேட்புமனுக்கள் பெறப்பட்டதன் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்

Source
Share Button

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் எந்தவித சிக்கலும் இல்லை என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய வானொலியிடம் கருத்துத் தெரிவித்த அவர், அனைவரின் யோசனைகளும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளன. இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின்னர், உரிய குறித்த யோசனை செயற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அரசியல் அமைப்பை செயற்படுத்துவதற்கு ஆணைக்குழு என்ற வகையில், தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பான பணத்தை பெற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. வாக்குப்பதிவு காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதற்கான திகதி, வேட்புமனுக்கள் பெறப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image