பென்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிரூபமா ராஜபக்ஷ தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஈட்ட முடியாத அளவு வருமானத்தை அவர் எவ்வாறு ஈட்டியிருந்தார் என்பது தொடர்பிலான விசாரணையை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் முன்னெடுக்கின்றது.
இதேவேளை, அரச நிறுவனங்களில் சேவையாற்றும் சிலர் லஞ்சம் பெறுவதாக கிடைத்திருக்கும் தகவலை அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சுற்றிவளைப்புக்களை அதிகரித்துள்ளது.