Home » தேர்தலில் வாக்களிப்பது பற்றி தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்.

தேர்தலில் வாக்களிப்பது பற்றி தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்.

Source

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி தேர்தல் ஆணைக்குழு விளக்கமளித்திருக்கின்றது. தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு புள்ளடியை இடமுடியும்.

விருப்பு வாக்குகளையும் தேர்தலில் வழங்குவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தாம் விரும்பும் வேட்பாளருக்கு முதலாவது இலக்கத்தையும் விருப்பம் ஏற்படுமாயின் ஏனைய இரண்டாம், மூன்றாம் வேட்பாளர்களுக்கு உரிய இலக்கங்களை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

புள்ளிடியோடு இலக்கங்களை பதிவு செய்தால் உரிய வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1982ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் விருப்பு வாக்குகளை எண்ணத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது.

இரண்டாவது வாக்குகளில் எண்ணுவதற்கான தேவைகள் ஏற்படுமாயின் அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image