Home » MUKAVARI 2023-10-10 15:51:06

MUKAVARI 2023-10-10 15:51:06

Source
2009 இல் தன்னம்பிக்கை உள்ளவர்களைக் கூட சிதைக்கும் பல சம்பவங்கள் நடந்தேறின. இலங்கைத் தமிழர்களாகிய நாம் நிர்வாணமாக்கப்பட்டு அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டோம். நிர்க்கதிக்கு ஆளான நாங்கள் அனைவரும் நிறைய புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளோம், தெரியாதவற்றை எதிர்கொண்டோம். அத்தோடு மட்டுமல்லாது உலகம் எதிர்கொண்ட பெருங்கொல்லி நோய்தனை எதிர்கொண்டோம், மேலும் 24/7 எங்கள் மக்கள் அனைவரும் நாம் வீட்டினுள்ளேயே முடங்கியிருந்தோம். எனவே உலகம் திறக்கத் தொடங்கும் போது, கொஞ்சம் பயமாகவும் நிச்சயமற்றதாகவும் உணருவது முற்றிலும் இயல்பானது. 

நாம் இன்று பூகோள அரசியல் காரணமான யுத்தங்கள் அதனால் விளையும்  பொருளாதார நெருக்கடிகள்; காரணமாக வாழ்க்கைச் செலவீனங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள  வேண்டிய தருணமாக விருக்கிறது.  

 “உங்களால் பறக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கும் தருணத்தில், அதைச் செய்ய முடியாமல் போய்விடும்." - ஜே. எம். பாரி 
இழப்பதற்கு எதுவும் இல்லை எமது கையிலே , ஆனால் பெறுவதற்கு உலகம் உண்டு எமது முன்னிலே ... உங்களது  ஒவ்வொரு புதிய முயற்சிகளும், சமூக கல்வி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியின் ஒவ்வொரு புதிய படியும், ஒவ்வொரு புதிய இயல்பாக  நீங்கள் செயற்பட செயற்பட, அந்த உற்சாகமும் உழைப்பும்  துணையாக உங்களைச் சுற்றியுள்ள உலகில் மீண்டும் உங்கள் நம்பிக்கையை விதைத்து வெற்றி பெறுவீர்கள்.
உலகில் நம்பிக்கை என்பது முற்றிலும் வேறுபட்ட கதையாகும். மேலும் ஒரு சிலருக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து கூட இருக்கும் மேலும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நம்பிக்கை என்பது நமக்குநாமே உருவாக்கிக் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. நாம் யார் என்ற உண்மையை நினைவில் கொள்வது - நாம் மனித உரிமைகள் அனைத்திற்கும் உரித்தானவர்கள். ஆனால் இலங்கை அரச யாப்பில்ஆறாந் திருத்தச்சட்டம்  மூலம் தமிழர்களாகிய எங்கள் அடிப்படை மனிதஉரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.  ஆயினும் நாம் திறன் மற்றும் மதிப்பு நிறைந்தவர்கள். இருந்தும் சில வேளைகளில் மழுப்பலாக உணரலாம். மேலும் நமது நல்ல நாட்களில், சமூக ஊடகங்கள் போன்ற இடங்களின் ஒப்பீடுகளால் நாம் எதிர்கொள்ளும் போது, அதை விரைவாக மறந்துவிடுவது எளிது. ஆகவே, நாம் யார், யாராக இருக்க விரும்புகிறோம் என்பதை நினைவூட்டும் ஞானமான வார்த்தைகளை நினைவுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பெற்று உலகிற்கு கொடுக்கும் நம்பிக்கை, உங்கள் உண்மையான அழகை மற்றவர்கள் பார்க்கவும் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கும். 
 “நீங்கள் வித்தியாசமாக இருக்கும்போது, சில நேரங்களில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மில்லியன் கணக்கான மக்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். உங்களை நிராகரிப்பவர்களை மாத்திரம் கவனித்துப்பார்த்து உங்கள் நம்பிக்கைகளை இழந்துவிடாதீர்கள் .உங்கள் நம்பிக்கை மேல் நம்பிக்கை கொண்டவர்களை கவனித்துப் பாருங்கள்."
நம்பிக்கை என்பது ஒரு தனி விளையாட்டு அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள் - உண்மையான ஆரோக்கியமான சமூகத்தில் முதலீடு செய்வதன் மூலம் நம்பிக்கையை பலப்படுத்தலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மற்றும் நட்பில் நாம் நம்மை முழுமையாகக் காணலாம். உங்கள் வாழ்க்கையை (மற்றும் மனநிலையை) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதிக உத்வேகத்திற்காக நீங்கள் தாகமாக இருந்தால், “உங்களால் முடியும் என்று நம்புங்கள்! ” ஆம் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உயர்ந்திடுங்கள். நம்பிக்கைகள் பலவிதமானவை. இறைநம்பிக்கை, நேர்மை மற்றும் தீங்குவிளையாத விடயங்களை நம்புவது எனப்பல்வேறு விதமான நம்பிக்கைள் உள்ளன. ஆனால் மிக முக்கியமானது உங்கள் தன்னம்பிக்கை. எமக்குள் இருக்க வேண்டிய தன்னம்பிக்கை என்பது நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்கின்ற உறுதியான உணர்வு ஆகும்.
  “உன்னை நீ நம்பினால், எப்படி வாழ்வது என்று உனக்குத் தெரியும்."          -ஜோஹான் வொல்ப்காங் வான் கோதே 
 தன்னம்பிக்கையாளர் ஒருவர் சுயநலக்காரராக இருக்கும் பட்சத்தில் அவரை அது தனிமைப்படுத்தக்கூடும்.
 “தனியாக இருப்பது எப்படி என்பதை அறிவது அன்பின் கலையின் மையமாகும். நாம் தனிமையில் இருக்கும்போது, தப்பிப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் இருக்க முடியும். ”-பெல் ஹ_க்ஸ் 
         தனிமரம் தோப்பு ஆகாது.....
எனவே நீங்கள் ஊருடன் சேர்ந்துவாழும் மனப்பக்குவம் உடைய பரந்த சிந்தனையாளர்களாக இருக்கின்ற பட்சத்தில் சூழலை மாற்ற முயற்சிக்கும் மறுமலர்ச்சிக் கருத்துகளை முன்னெடுக்கும் முயற்சிக்கும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள் ... உங்கள் காரியத்தைச் செய்யுங்கள், பலர் அதை விரும்பினாலும், சிலர் அதை விரும்பாவிட்டாலும். தடைகள் பல வரலாம். கவலைப்பட வேண்டாம். பயப்படவேண்டாம்.
 “பயத்தை சமாளிப்பது உங்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கான விரைவான வழியாகும்." - ராய் டி. பென்னட்
 உன்னதமான இலட்சியங்களோடு நீங்கள் உங்கள் பணிகளைத் தொடரும் பொழுது பலர் பாராட்டலாம். சிலர் விமர்சிக்கலாம். “மற்றவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று விமர்சனங்களைப் புறக்கணிக்க வேண்டாம். செவிமடுங்கள். ஏனெனில் நியாயமான விமர்சனங்கள் எங்களை சீர்ப்படுத்த உதவும். தனிப்பட்டமுறையில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில்
* “ நான் நானாக தான் இருக்கின்றேன். நான் யாராக இருக்க விரும்புகிறேன் என்பதனை நானே முடிவெடுக்கின்றேன் என உறுதியோடு உங்கள் பணிகளைத் தொடருங்கள். 
தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நீங்கள் அடையவேண்டிய உயரத்தைக் குறி வைத்து உயருங்கள். 
* “பயம்? ஒரு மனிதனுக்கும் பயத்திற்கும் என்ன சம்பந்தம்? பய உணர்வு தன் நம்பிக்கையை அடியோடு அழித்துவிடும்.” 
 ஒன்றை மட்டும் நினைவு கொள்ளுங்கள். நீங்களே உங்களை ஆளவேண்டும். எண்ணங்களே வாழ்க்கை. நல்ல எண்ணங்களோடு நற்சிந்தனை வழி பிறக்கும் உங்கள் நம்பிக்கைகள் பல அரிய வாய்ப்புக்களை உருவாக்கும். நல்வாய்ப்பு  வாழ்க்கையை ஆளுகிறது, தவறான வாய்ப்புக்கள் வாழ்வையே அழித்துவிடும். எனவே கிடைக்கும் நல் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உங்களதும் உங்கள் சமூகத்தினதும் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குங்கள். 
தன்னம்பிக்கையாளராக நீங்கள் மாறும் பொழுது ஒரு வைரம் போல் பிரகாசிப்பீர்கள். 
வைரம் பட்டை தீட்டப்பட முன் பிரகாசிப்பதில்லை. நேரம் எடுத்து அழுத்தம் பிரயோகித்து பட்டை தீட்ட அதன் மெருகேறி வைரம் பிரகாசிக்கத் தொடங்குகின்றது. வைரத்தை வைரத்தால்தான் பட்டை தீட்ட முடியும். வைரம் மட்டுமே தன்னுள் பாயும் வெளிச்சத்தில் 85 சதவிகிதம் ஒளியை பிரதிபலித்து வெளியே அனுப்பிவிடும். 
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். . பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. 
“நீங்கள் யார் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். வாழ்க்கையின் திறவுகோல் சவால்களை ஏற்றுக்கொள்வதுதான். அதற்குப் பிரதானமானது நம் நம்பிக்கையை உறுதியாக மற்றும் சிறப்பாக வளர்ப்பதற்கான வழி சிறிய மாற்றங்களுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் நமது தன்னம்பிக்கையை வளர்க்க கூடிய விஷயங்களை பயிற்சி செய்வதுதான்.” சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எந்த நேரத்திலும் தேவையான ஒன்று நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த சூழலிலும் எல்லா நேரத்திலும் 100 சதவிகிதம் அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா! அதற்கான சில பயனுள்ள தரவுகள் பின்வருமாறு. 
 1. செய்வதை ஆர்வமுடன் செய்யுங்கள்: நீங்கள் ஒரு செயலில் ஈடுபடும் போது உள்ளார்ந்த ஆர்வமுடன் இருந்தால் அதை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது. இதனால் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். தொடர்ந்து நீங்கள் ஈடுபடும் செயல்களில் இந்த தரவை பின்பற்றினால் போக போக உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.
 2. சரி என்று படுவதை பேசுங்கள்: உங்கள் கருத்துக்களை பிறர் முன் வெளிப்படுத்த எப்போதும் தயக்கம் காட்டாதீர்கள். நீங்கள் மனதில் நினைப்பதை தைரியமாக மற்றவர்கள் முன் வெளிப்படுத்தினால் அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை மிகவும் உறுதியானதாக இருக்கும். எனவே உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றும் விஷயங்களை பலர் முன்னிலையில் கூறவோ அல்லது செய்யவோ ஒருநாளும் தயங்காதீர்கள். முகத்திற்கு நேரே பட்டென்று பேசும் திறன் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையை பிறருக்கு பறைசாற்றும். 
3. நிராகரிக்கப்பட்டால் கலங்காதீர்கள்.. உங்களது செயல் அல்லது கருத்து ஓரிடத்தில் நிராகரிக்கப்பட்டால் அது உங்களை பற்றி நீங்களே மோசமாக உணர வைக்கும், உங்கள் நம்பிக்கை உணர்வையும் குலைக்கும். எவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்வன் ஒருகட்டத்தில் எந்த வகையிலாவது நிராகரிப்பை எதிர் கொண்டிருப்பார்கள். இன்னும் சில நிராகரிப்புகளையே உரமாக்கி கொண்டு அதன் பின் மனஉறுதியை வளர்த்து வெற்றி படிக்கட்டுகளில் ஏறி இருக்கிறார்கள். எனவே நிராகரிப்பை பெரிதாகஎடுத்து கொள்ளாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி முன்னே செல்லுங்கள். 
 4. உங்களை நீங்கள் தான் ஆளவேண்டும்: உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் அரசன் என்று தீர்மானித்து அதற்கேற்ப உறுதியாக செயல்படுங்கள். உங்களை நீங்களே உயர்வாக மதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உங்களை நீங்களே மிகையாக எண்ணுவது என்பதும் முக்கியம். ஏனென்றால் வாழ்வில் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும். அது சூழலை பொறுத்தது. தோல்வி வந்தால் துவளாமல் இருக்கவே நம்பிக்கை பயன்பட வேண்டுமே தவிர சோர்ந்து போவதற்கு அல்ல. மேலும் உங்கள் மீது நீங்களே வைத்து கொள்ளும் நம்பிக்கை மற்றும் மதிப்பு உங்களை எந்த விஷயங்களில் ஈடுபாட்டாலும் வசதியாக உணர வைக்கும். 
 5. புதிய விடயங்களை முயற்சியுங்கள்: புதிய புதிய விடயங்களை முயற்சி செய்வது நம்முடைய நம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செய்த விடயங்களையே திரும்ப திரும்ப செய்வது உங்கள் மனதையும் சலிப்படைய வைக்கும். புதிய விடயங்களை முயற்சிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் நம்பிகையை முன்பை விட அதிகரிக்கும். 
 6. ஆரோக்கிய உணவு: சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. உடலின் உள்ளிருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக உணரும் போது தானாகவே மனமும் நலமாக இருக்கும். இதனால் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி அதிகரிக்கும். 
 7. சுத்தம் சுகம் தரும்: சுயசுத்தம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் புறச் சுத்தம் தானாக வரும் என்பர். 
 நம்பிக்கையுடன் நீங்கள் செயல்களை ஆரம்பிக்கமுன்னமே நீங்கள் வெற்றி பெற்றவர்களாகிறீர்கள். ஏனெனில் நீங்கள் செயல்வீரர்களாக விளங்குகின்றீர்கள். மனித உரிமைகளை மதித்து நடவுங்கள். மனித உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். வெற்றியைத் தலைக்கேற விடாதீர்கள். தோல்வியை இதயத்திற்கு எடுத்துச் செல்லாதீர்கள்.!

                  என் தேசம் வாழ் "இளைய சமுதாயமே"

                           👥 ஒன்றாகு ! வென்றாடு!👥

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image