Home » MUKAVARI 2023-12-21 22:48:07

MUKAVARI 2023-12-21 22:48:07

Source

 வீழ்வது என்பது விபத்து,  வீழ்ந்தே கிடப்பது பேராபத்து ! – முகுந்தமுரளி

 வரலாறு நமக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவம். நாம் எதிலும் தோற்பதேயில்லை. ஒன்று வெற்றி கொள்கின்றோம், இல்லையேல் கற்றுக் கொள்கின்றோம். வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்ட அனுபவப்பாடங்கள் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.
 பற்றிழந்து, பாசமறுத்து, சுகபோகங்கள் துறந்து ஈழத்தமிழினத்தின் விடிவுக்காக, சத்தியவேள்வியில் ஆகுதியாகி, சாத்தியமில்லாத ஒரு விடயத்தை சாத்தியமாக்கி சரித்திரமாகிய மாவீரர்கள் வெற்றியின் விதைகள். அரசிழந்து போன தமிழர்கள் தமது அடையாளத்தை நிறுவி தாயகக் கோட்பாட்டை நடைமுறை அரசாக எழுந்து நிற்க வைத்தது சாதனை நாயகர்களும் அவர்தம் தியாகங்களும். சரித்திரத்தில் தரணியே, கண்டிராத ஒப்பற்ற, தன்னலமற்ற தேசியத் தலைமையின் வழிகாட்டலில் யாவும் தலைநிமிர்ந்த பொழுது அதுபொறுக்காது உலகமே திட்டமிட்டு அரங்கேற்றிய சூழ்ச்சி, அதனைச் சாதகமாக்கி நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை, மனித உரிமைகளைச் சட்டமாக்கி மனித உயிர்களையே பகடைக்காய்களாக்கி வல்லாதிக்க சக்திகள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம், அதன் விளைவாக நடந்த முள்ளிவாய்க்கால் பேரவலம். நந்திக்கடல் கண்ட அனுபவம். அரசில்லாததால் இனக்கருவறுப்புக்குள்ளாகித் தவிக்கும் ஈழத் தமிழ் மக்கள் கேடுகெட்ட உலக - உள்நாட்டு அரசியலில் சிக்கித் தவிக்கும் மானிட இனமாகும். 
 தீராத துன்பச்சுழிக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழினம் முள்ளிவாய்க்கால் முன் முள்ளிவாய்க்கால் (இனப்படுகொலை) பின் என பல பாடங்களைக் கற்றுக் கொண்டு நிமிர்கின்றது. இமாலயப் பிரகடனம் எனும் அரசியல் சூழ்ச்சியின் பின்னணி புரிந்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நமக்கு கற்றுத் தந்த பாடத்தில் முதன்மையானவற்றில் ஒரு புரிதல் “ அரசியல் மொழி பொய்களை உண்மையாகவும் கொலைகளை மரியாதைக்குரியதாகவும், தூயகாற்றிற்கு ஒற்றுமையின் தோற்றத்தை அளிக்கவும் வடிவமைக்கப்ட்டுள்ளது” என அறிஞர் ஜார்ஜ் ஆர்வல் கூறிய கூற்றின் மெய்த்தன்மையாகும். 

இத்தருணத்திலே வரப்போகும் முத்தரப்புத் தேர்தல் (இந்தியா-இலங்கை-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) தமிழர்கள் வாழ்வுரிமையை நிர்ணயிக்கப்போகும் அரிய சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வேளையிலே சூழ்ச்சிக்கோட்பாடுகளின் செயற்திட்டங்கள் அரங்கேறத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. துவாரகாவின் வருகை, இமாலயப் பிரகடனம் என நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
 இமாலயப் பிரகடனம் என்பது தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தை மழுங்கடிக்கும் சிங்களத்தின் சூழ்ச்சி நிகழ்ச்சி நிரலுக்குத்துணை போகின்றது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே திட்டமிட்ட இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றை இந்தப் பிரகடனம் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. 
//ஆயுதப் போராட்டம் இனப்படுகொலையூடாக அழிக்கப்பட்ட பின்னரும் பண்பாட்டு இன அழிப்பும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் இன்றுவரை தொடர்வதை இப்பிரகடனம் எடுத்துரைக்கவில்லை.// 
//ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் வரலாறு சொல்லப்படவில்லை.// //இனtழிப்பிற்கு சர்வதேச நீதி ஏன் அவசியம் என்பதும் சொல்லப்படவில்லை.//  //சுயநிர்ணய உரிமை பற்றி இம்மியளவும் இதில் எதுவும் இல்லை. //  அழிப்பிற்கு ஆளாகிக்கொண்டும், நில ஆக்கிரமிப்புக்குள்ளும் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் வழங்காது சுயநிர்ணய உரிமையைக் கூட குப்பையில் போட்டு எமது தேசிய விடுதலைக்கான அடிப்படைகள் அனைத்தையும் அடியோடு பிரட்டிப் போடும் நோக்கோடு இந்த இமாலயப் பிரகடனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 
//மக்கள் தீர்ப்போடு மலர்ந்த வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை அடியோடு உதாசீனப்படுத்தியுள்ளது.//
ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதும் அவர்களின் திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் வெளிப்படுத்த வேண்டியது ஊடகதர்மம். தமிழின அழிப்பிற்கெதிரான ஆதாரங்களைத் திரட்டவோ அல்லது சர்வதேச மானிடவியற் சட்டங்களாலும் பாதுகாக்கவோ தவறிய சர்வதேசங்களின் மனசாட்சியைக் கிளறி சர்வதேச மானிட உரிமைச் சட்ட நியதிகளுக்குட்பட்ட சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கோராமல் இன நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற பசப்பு வார்த்தைகளுடன் சிங்கள அரசை அனுசரித்துச் செல்ல முனைவது அவர்கள் தனிப்பட்ட சலுகைகளை இலங்கையிடமிருந்தும் சில வல்லாதிக்க அரசுகளிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்கோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
 வல்லரசுகளிற்கு இடையிலான இப்பனிப்போரில் இடைத்தரகர்களின் முகத்திரைகளை ஆதாரங்களுடன் இனங்கண்டு உணர்ந்ததன் அடிப்படையில், இம் மே(ல்)தாவிகளின் செயற்பாட்டின் பின்னணியிலுள்ள சூட்சும சூத்திரதாரிகளின் பரிசோதனைக்குப் பலியாகி, நிற்கின்ற பலியாடுகளா இவர்கள் என்றால் இல்லை இல்லை இவர்கள் இனத்தையே அழிக்கும் கோடாரிக்காம்புகள் என்பதே பதிலாகும்;! 
கோடாரிக் காம்புகளே! சாட்சிகள் இல்லையென்று துள்ளாதீர்கள். இன்று உங்கள் பணப்பெட்டிகளை நிரப்பும் பொழுது இரண்டு சாட்சிகள் என்றும் உண்டு என்பதை எப்பொழுதும் மறந்துவிடாதீர்கள். ஓன்று உங்கள் மனச்சாட்சி. மற்றையது இறைசாட்சி. மனச்சாட்சி இப்பொழுது பேசாது நீங்கள் படுத்த படுக்கையாக மரணத்தின் பிடியில் இருக்கும் பொழுது அது பக்குவமாய்ப் பேசும். நீங்கள் செய்கின்ற அநியாயம், அநீதி உங்கள் சந்ததிக்கே அவப் பெயரைத் தேடித்தரும். 
ஈழத் தமிழினமே ! நல்லிணக்கம் என்ற போர்வையில் நமக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் செய்து ஈழத்தமிழர்களை அவர்களது அரசியல் அபிலாசைகளை நீதிக்கான போராட்டத்தை ஓரங்கட்ட ஈழத் தமிழருக்கு நடந்த நடந்துகொண்டிருக்கின்ற இனப்டுகொலையை அடியோடு மறுதலிக்க இந்தப் பிரகடனம் முயல்கிறது. 
பதின்நான்கு வருடங்கள் ஒதுங்கியது போதும் மக்களே! புல்லுருவிகளை இனங்கண்டு கொள்ளுங்கள்! இவர்களுக்கு நிதியுதவிகள் வழங்குவதால் இவர்கள் தொடர்ந்தும் இதே போன்ற இரண்டகங்களில் ஈடுபட, தொடர்ந்தும் உற்சாகமளிக்கின்ற பங்காளர்களாக நீங்கள் மாறுகின்றீர்கள். மக்கள் உங்களை இனங்கண்டு உங்கள் வியாபாரங்களுக்கான ஆதரவை கனடாவாழ் தமிழ் மக்கள் வழங்காத சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
 அதேபோல் அனுசரணை வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்கள் பிற்புலம் அறியாது அவர்களது அனுசரணையைப் பெற்றுக்கொள்ளும் அமைப்புக்களே! இத்தகைய அனுசரணையார்களாக நடித்து தரகு வேலை பார்க்கும் இச் சூழ்சிக்கோட்பாட்டின், சூத்திரதாரிகளின் உளவாளிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். தாயகம், தேசியம் என்று பெயர் சூட்டுவதால் மட்டும் அவர்களை நம்பிவிடாதீர்கள். இளவரசன் மற்றும் இரத்தினமான குணம் எனும் பொருளுடைய பெயர் கொண்ட இடைத்தரகர் அரச விசுவாசியாகவும், சிங்கள ராஜதந்திரியும் மேற்குலகின் செல்லப்பிள்ளையுமான செஞ்சால்வைக் குடும்பத்தின் உறவினருக்கும் உற்ற தோழனாகச் செயற்படுபவர் ஆவார். 
இப்பேரம் பேசலின் பின்னணியில் சிங்கப்பூரில் 2015இல் பிள்ளையார் சுழியிடப்பட்டு மங்கள சமரவீரவினால் அரங்கேற்றப்பட்ட முதல் இரகசியச் சந்திப்பின் நகர்வு நேபாளத்தில் நடந்தேறிய இரகசியச் சந்திப்புக்கள் இரு சந்திப்புக்களிலும் பங்குபற்றிய ஒரே அணி அதை ஏற்பாடு செய்தவர்கள் பின்னணிகள், சொல் (கேம்) விளையாடும் பின்னணியுடன் பங்கேற்ற கற்றறிந்த அறிஞர்களாயும், சட்டத்தரணிகளாயும் தம்மைக்காட்டி தம் சுயலாபம் கருதிய கயவர்களின் கூட்டுச்சதிகள் யாவும் வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலத்திற்கு வரும். ஏனென்றால் உண்மைகள் உறங்குவதும் இல்லை. ஊமையாகிப் போவதும் இல்லை. 
பொய்யர்களே! பொய்கள் நிலைத்து நிற்க வைக்க நீங்கள் முயன்றாலும் அது ஒருபோதும் வெற்றி அடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எம் மக்களின் கோபமானது, உங்கள் எல்லோருக்கும் திமிராகத் தெரியலாம். அவர்களது உணர்ச்சிவசப்பட்டு ஆவேசப்படும் தன்மையை வைத்து அவர்களை வன்முறையாளர்கள் எனக்காட்ட முற்படும் படித்த மே(ல்)தாவிகளே உங்கள் யாருக்கும் புரிவதில்லை அக்கோபம் தார்மீகக் கோபம், அது வேதனையின் வெளிப்பாடு என்றுஇவையெல்லாம் தெரியாமல் நல்லெண்ணத்துடன் பயணிக்கும் ஏனைய உறுப்பினர்கள் இரண்டகம் செய்யும் கூட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்திவிடுவார்கள், ஆனால் தன்னுடைய தவறுகளை நியாயப் படுத்துபவர்கள் திருந்தவே மாட்டார்கள். “மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் யார் தங்கள் பிரதிநிதிகள் என்று. சாதுமிரண்டால் காடு கொள்ளாது. தமிழர்கள் ஒன்று திரண்டால் உங்கள் பருப்பு வேகாது. பரிகாரங்களும் தீர்வுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களிலிருந்து உருவாக வேண்டுமே தவிர கைக்கூலிகளால் அவை முன்வைக்கப்பட முடியாது. தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் வேணவாக்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்கள் தமிழ் இனத்தை அழிக்க செயற்படும் உளவாளிகளே.”

“ அரசியலாலும் பண்பட்டாலும் உலகளாவிய அளவில் விரைந்து ஐக்கியப்படும் சமூகங்களை கண்டறிவதில் தொடங்கி அந்தச் சமூகத்தின் நம்பிக்கையிலும் பண்பாட்டிலும் பல புதிய பிரிவுகளை பிளவுகளை ஏற்படுத்தி எவ்வாறு தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்று பாடுபடுவது தான் வல்லாதிக்க சக்திகள். அத்தகைய வல்லாதிக்க சக்திகளின் சூழ்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் உளவாளிகளை மக்களே இனம் கண்டு கொள்ளுங்கள்.” 
மக்களே இவர்கள் நடத்துகின்ற கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு உங்கள் பொழுதுபோக்குகாகப் போவதனை வைத்து இவர்கள் கனடிய அரசிடமிருந்து திரட்டுகின்ற நிதிகளும் இவர்களின் இரண்டகச் செயல்களை ஊக்குவிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். கனடியர்களாக சிந்தித்தால் கனடா தேசத்தின் விழுமியங்களையும் அல்லவா இவர்கள் மழுங்கடிக்கிறா-ர்கள். கனடாவாழ் தமிழினமே ! கனடாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு முரணாக போர்க்குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்ட தனி நபர்களுடனான உறவுகளை வளர்ப்பதில் கனேடிய அரசால் பொது நிதியளிக்கப்பட்ட நிறுவனம் நெறிமுறை மீறல் சரியானதா? சிந்தியுங்கள். இவர்களுக்கு நாங்கள் உதவியதெல்லாம் எமது விடுதலைக்காக குரல் கொடுப்பார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில்தானே…. இவர்கள் செய்யும் இரண்டகத்திற்கு உங்கள் நடவடிக்கை என்ன? இனியும் அரசியல் செய்யும் அமைப்புக்களை நாம் நம்பி நடக்கலாமா அல்லது நாமாக மக்கள் போரட்டக் களமாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இனமாக நீதிக்காக குரல் கொடுக்க எழுக என் இனமே! முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி என்பது பாரிய பெருவிபத்து. அதன் பின்னர் தமிழினம் வீழ்ந்தே கிடப்பது என்பது தேர்வு…. நாமே நம்மை ஏமாற்றி வீழ்ந்தே கிடக்கின்றோம்! சூழ்ச்சிவலை பின்னும் சூத்திரதாரிகள் நம்மத்தியில் நம்மவர்களை வைத்தே நம்மை எழுந்திருக்க விடாமல் சதி செய்கின்றனர். அன்று இயக்க அரசியலால் பிரித்தாட்டப்பட்ட இனம் இன்று அமைப்பு அரசியலால், கட்சி அரசியலாலும் நாசமாகிக் கொண்டிருக்கின்றது. என் இனமே! என் சனமே! என்றைழைத்த எம் தலைவன் எம்மை மட்டுமல்ல நிலமிழந்த தமிழீழ அரசாங்கத்தையும் திட்டமிட்டு அத்திவாரமிட்டே தன் தியாகவேள்வியை நிறைவேற்றினார்…
 ஆனால் அத்தகைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்றுவரை இந்த இரண்டகம் கண்டும் மௌனம் காப்பதேன்? ( மாவீரர் நாளை மகத்தாக நினைவேந்தும் எங்கள் கட்டமைப்பும் ஊமையாகிப்போனதா? 
மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர் எல்லாம் மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக பெட்டிகள் பரிமாற்றப் பின்னணியில் நாடகமாடுகின்றார்கள். என் இனமே என் சனமே நீ இதற்கு மேலும் உறங்கிக் கொண்டிருந்தால் தமிழினத்திற்கான விளைவு ஆபத்தானது. வீழ்ந்து கிடக்கப்போகின்றோமா? விழித்தெழப் போகின்றோமா? சிந்தியுங்கள்! ஒன்றாகு தமிழினமே! வென்றாட வா!
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image