Home » மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Source
Share Button நாட்டில் இன்று இடம்பெறவுள்ள வேலைநிறுத்தத்தை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். அத்தியாவசிய, அவசர சேவைகள் எந்தவித தடையும் இன்றி மேற்கொள்ளப்படவுள்ளன. அரசாங்கமும் சுகாதார அமைச்சும் தமது பிரச்சினைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தாமையினால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வைத்திய சேவைகள் ஒன்றிணைந்த சபை அறிவித்துள்ளது. மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாவும்; சபை அறிவித்துள்ளது. மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மின்சார கட்டமைப்பு முன்னெடுத்து செல்லப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற மாட்டாது. ஆனால், நாட்டின் 12 பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபை வலியுறுத்தியுள்ளது. இன்று இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என துறைமுக தேசிய ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, வழமையான முறையில் இன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image