Home » இலங்கை ரூபாயின் மதிப்பு உயர காரணமென்ன? ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!

இலங்கை ரூபாயின் மதிப்பு உயர காரணமென்ன? ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!

Source
அரசாங்கம் எடுத்துள்ள சிறந்த பொருளாதார தீர்மானங்களினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியும் பாதிக்கப்பட்டுள்ளது. 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் டாலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு அளவு, 2023 பிப்ரவரி முதல் வாரத்தில் 2.1 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 23.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. செப்டம்பர் 2022 இல் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை பிப்ரவரி 2023 இல் 107,639 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 261% வளர்ச்சியைக் காட்டுகிறது. பாதாளத்தில் இருந்த இந்நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை இந்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். N.S
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image